திருகோணமலை - சேருநுவர பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்ட, முன்னாள் போராளி ஒருவரின் வீட்டிலிருந்து வெடி பொருட்கள் மற்றும், கருவிகள் மீட்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி அம்பாள் குளத்தில் அமைந்துள்ள அவரது நேற்று வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன் போது குறித்த வீட்டில் இருந்த, கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியின் மனைவி மற்றும், அவரது சகோதரி கைது செய்யப்பட்டனர்.
சோதனை நடவடிக்கையின் போது ரி56 ரக துப்பாக்கி 1, சிறிய ரக துப்பாக்கிகள் 3, கைக்குண்டுகள் 5, ரி 57 துப்பாக்கி ரவைகள் 150, சிறிய ரக துப்பாக்கி ரவை 45, மடி கணினி 1, தொலை பேசிகள் 4, எம் கே.எம் ஜி ரவைகள் 6, வெடிப்பு கருவிக்கான வயர்கள், வெடிப்பு கருவிகள் 4, ஜிபிஎஸ் 1, தானியக்கிகள் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.